Friday, January 14, 2011

எல்லாப் புகழும் இறைவனுக்கே

எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே


உரியதாகும். அவன் மாபெருங்

கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.

* எங்களுக்கு நீ (இறைவன்) நேரான வழியைக்

காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப்

போகாதவர்களின் வழி.

* வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும்,

உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும்

மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில்

உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம்

அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து

சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித்திரிந்து

பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று

என்பதைப் பாருங்கள்.

* இஸ்லாம் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிதல், அமைதி என்று பொருள். இறைவனுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி

கிட்டும் என்பதே அதன் கருத்தாகும்.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...