எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே
உரியதாகும். அவன் மாபெருங்
கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* எங்களுக்கு நீ (இறைவன்) நேரான வழியைக்
காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப்
போகாதவர்களின் வழி.
* வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும்,
உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும்
மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில்
உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம்
அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
* உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து
சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித்திரிந்து
பொய்யர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று
என்பதைப் பாருங்கள்.
* இஸ்லாம் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிதல், அமைதி என்று பொருள். இறைவனுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி
கிட்டும் என்பதே அதன் கருத்தாகும்.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment