Friday, June 10, 2011

 புண்ணியவான்


உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உனது குரலை சற்றுத் தாழ்த்தி கொள். திண்ணமாக அனைத்து


குரல்களிலும் மிகவும் அருவருப்பானது கழுதையின் குரலாகும்.

* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும் போது வீண் விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மித மிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.

* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.

* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கின்றான்.

* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்!

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை... சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான்... உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...