Wednesday, April 1, 2009

கலிமாச் சொல்ல நா வராமல்

ரஸீலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்வம் அவர்களின் காலத்தில் மரணத்தருவாயில் இருந்த வாலிபர் கலிமாச் சொல்ல நா வராமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
இச்செய்தி மாநபிஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவிக்கபட்டதும் அன்னார் அங்கு வந்து அவ்வாலிபரிடம் நிலைமையை விசாரித்தார்கள் அப்பொமுது அவர் யாரஸீலல்லாஹ் பூட்டுபோன்ற ஒன்று என் மனதில் போடப்பட்டுள்ளது. ஆதனால் என்னால் கலிமாச் சொல்லமுடியவில்லை. என்றுகூறினார் அவரைப்பற்றி விசாரித்தபோது அவர் தன் தாயாரைத் துன்புறுத்தி வந்ததால் தாயார் இவர்மீது கோபமுள்ளவராக இருக்கின்றார் என்பது தெரியவந்தது. காருண்ய நபிஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்கள் அவரின் தாயாரை அழைத்துவரச்செய்து ஒருவர் பெரும் நெருப்பை மூட்டி அதில் உன்னுடைய மகனைத் தூக்கிப்போட்டால் நீ அதனைத் தடுத்து நிருத்த சிபாரிசு செய்வாயா? ஏன்று கேட்டார்கள் அதற்க்கு அவர் ஆம் யாரஸீலல்லா தடுத்து நிருத்துவேன் என்று கூறினார்கள் அப்படியானால் உன் மகனனுடைய குற்றங்களை மன்னித்து விடுவாயாக என நபி ஸல்லால்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதும் மன்னித்து விட்டேன் என்று கூறினார்கள்.
பிறகு கலிமாவைகூறும்படி அவ் வாலிபரிடம் கூறபட்டபோது உடனே அவர் கலிமாக் கூறினார் நபிபெருமானார் ஸல்லால்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டால் அவர் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற்றதற்க்காக நபி யவர்கள் அல்லாவிற்க்கு நன்றி செலுத்தினார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...